Skip to main content

Posts

Showing posts from January, 2022

இடங்கழி நாயனார்.

வளமை மிகுந்த கோனாட்டில் கொடும்பாளூரில் சோழச் குலத்தில் இடங்கழி நாயனார் பிறந்தார். கனவிலும் நனவிலும் கண்ணுதலார் கமலமலரடியைப் போற்றி வந்தார். சிவாலயங்கள் எல்லாவற்றிலும் பூசனைகள் சிறக்குமாறு செய்தார். ஒரு அடியார் நாள்நோறும் சிவனடியார்க்கு அமுதளிக்கும் நியமம் பூண்டவர். ஒருநாள் ஒன்றும் இலராகி இடாபட்டார். இடங்கழியாருடைய நெற்களஞ்சியத்தில் இரவில் இருளில் வந்து நெல்லை எடுத்தார். காவலர்கள் பிடித்து இடங்கழியார் முன் விடுத்தார்கள். அரசர் ‘களவு செய்யலாமா?" என்று கேட்டார் "சிவனடியார்க்கு அன்னதானஞ் செய்யும் பொருட்டு இது செய்தேன்” என்றார் அவர். உடனே இடங்கழியாச் இரக்கம் அடைந்து, 'இவர்அன்றோ எனக்குக் கருவூலம்?" என்று கூறி, "நெற்களஞ்சியமே யன்றி, ஏனைய அரசாங்கப் பொருள்கள் யாவும் அடியார்கள் கொள்ளை கொள்ளுமாறு பறை சாற்றுங்கள்" என்றார். அவ்வாறே பறையறைந்தார்கள். அடியார்கள் பொன்னும் நெல்லும் கொண்டு இன்புற்றார்கள். மன்னர் பன்னெடுங்காலம் வாழ்ந்து சிவன் சேவடி சேர்ந்தார்,   குரு பூசை இடங்கழி நாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.    

இயற்பகை நாயனார்

  இயற்பகையார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவரை “இல்லையே எனாத இயற்பகைக்கு அடியேன்” என்று திருத்தொண்டத் தொகை வர்ணிக்கிறது. சோழவள நாட்டில் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் அவதரித்தவர். உலக இயலுக்குப் பகையானவர். அதனால் இயற்பகையார். அருளின் இயலை ஒருபோதும் பகையாதவர், பெருஞ் செல்லம் படைத்தவர். சிவனடியார் விரும்பிக் கேட்கும் எதனையும் இல்லை என்னாது வழங்கும் இயல்பினையுடையவர். இவருடைய என்னல் தன்மையை உலகுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான் தூர்த்த வேதிய அடியார் கோலத்துடன் வந்தார். இயற்பகையார் அவரை வரவேற்று வந்தனை வழிபாடு செய்தார். வந்த அடியார் "மன்னு காதலுன் மனைவியை வேண்டி வந்தனம்" என்றார். இயற்பகையார் உள்ளம் உவந்து, "என்பால் உள்ளதனையே கேட்டருளினீர்” என்று கூறி மனைவியாரை வழங்கினார், "உறவினர் தடுப்பார்கள்; நீ துணையாக வருக" என்றார் அடியார். இயற்பகையார் வாள் தாங்கி உடன் சென்றார். தடுத்த உறவினர்களைக் கொன்று குவித்தார். திருச்சாய்க்காட்டின் அருகில் இனி நீ போகலாம்" என்றார் இறைவர். இயற்பகையார் இ...

ஆனாய நாயனார்

அலைமலிந்த புனல்மங்கை ஆனாயற் கடியேன்- திருத்தொண்டர்புராணம்     சோழ நாட்டில், திருமங்கலம் என்ற தலத்தில் இடையர் குலத்தில் தோன்றினார் ஆனாயர். இளமையிலிருந்தே திருநீற்று அன்பினில் சிறந்து விளங்கினார். திருஐந்தெழுத்தையும் இடையறாது ஓதுவார்.பசுக்குலங்களை மேய்த்துப் பரமனைச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.பசுக்குலங்கள் அவர் அன்பினால் நன்கு பெருகின         ஒரு கார்த்திகை மாதம் அஸ்த நன்னாளில் பசுக் கூட்டங்களை ஓட்டி கொண்டு ஒரு கொன்றை மரத்தின் கீழே சென்றார். கொன்றை மலர் அவருடைய சிவபக்தியை மிகுவித்தது பல்லாக்குழலை யெடுத்து ஐந்தெழுந்தை அதில் இணைத்து வாசித்தார். அந்த நாத வெள்ளம் விண்ணும் மண்ணும் ஓடிநிறைந்தது. சராசரங்கள் யாவும் இரைவயப்பட்டு உருகின.  பாம்பும் மயிலும் சேர்ந்து விளையாடின. விண்ணவர் விமானங்களில் வந்து கேட்டு உருகினார்கள்.            " நலிவாரும் மெலிவாரும் உணர்வொன்றாய் நயத்தலினால்           மலிவாய்வெள் ளெயிற்றரவம் மயில்மீது மருண்டு விழும்           சலியாத நிலை அரியும்...

அரிவாட்டாய நாயனார்

 சோழ நாட்டில் கணமங்கலம் என்றவூரில் வேளாளர் குலத்திலே தாயனார் என்பவர் பிறந்தார். மாசில்லாத ஈசன் அன்பர். நாடோறும் இறைவனுக்குச் சம்பா அரிசிச் சோறும், செங்கீரையும் மாவடுவும் நிவேதனஞ் செய்து அமுது செய்வித்து வந்தார். துன்பம் வந்த போதும் தங்கள் கொள்கையினின். தவறாதவர்கள் அடியார்கள் என்பதை உலகுக்கு உணர்த்துமாது இறைவன் அவருக்கு வறுமையாகிய இன்னலைத் தந்தருளினார் வறுமையால் வாடியும் அவர் திருத்தொண்டில் வாட்டமுறவில்லை. பெருஞ் செல்வராய் வாழ்ந்த அவர் இப்போது தாமே கூலியாளாகச் சென்று நெல்லறுத்து, அதனால் வருடி நெல்லை அமுதாக்கி அரனார்க்கு ஊட்டுவாராயினார். கூலியால் வரும் கார் நெல்லைத் தாம் உண்பார்; செந்நெல்லைச் சிவனுக்கு நிவேதிப்பார். எல்லாம் செந்நெல்லாகவே கூலியில் கிடைத்தது அவை முழுவதும் ஈசனார்க்கே ஆக்கினார். பல நாட்கள் பட்டில் கிடந்தார். கீரைகளையுண்டார். சில நாட்கள் நீர்தான் உணவாக நின்றது. ஒரு நாள் செந்நெல்லரிசி, செங்கீரை, மாவடு இவைகளைக் எடுத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றார். மாட்சி மிகுந்த மனைவியார் பஞ்சகவ்யம் ஏந்தி அவருடன் சென்றார். செல்லும் வழியில் பசியின் களைப்பினால் வரப்பு தடுக்கித் தாயனார் கீழ...

அமர்நீதி நாயனார்

  அமர்நீதி நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். அமர்நீதியார் சோழநாட்டிலே பழையாறை என்னும் பழமையான (தொன்மையான) பகுதியிலே பிறந்தார். 7 ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்தவர். கோவணக் கள்வராக வந்த சிவபெருமானின் முன்பு துலைத்தட்டில் (தராசில்) தன் மனைவி, மகனுடன் ஏறித் தன்னையே அவருக்கு அர்ப்பணித்து, அத்தட்டே விமானமாகச் செல்ல, சிவபதம் பெற்ற பெருமைக்குரியவர் இவர். வாழ்க்கைப் புராணம்          சோழவள நாட்டில் பழையாறை என்ற பதியில் வணிகர் குலத்தில் பிறந்தவர். அடியார்க்குக் கந்தை, கீளுடை, கோவணம் முதலியன கருத்தறிந்து உதவி, செல்வத்தின் பயன் பெற்று வந்தார்.             அருகில் உள்ள திருநல்லூர் என்ற சிவத்தலத்தில் சென்று சிவபெருமானுடைய திருவிழாக்களைச் சேவிப்பார். அங்கு ஒரு திருமடம் புதுக்கி, அங்கேயே தங்கி அறம் பல புரிந்து வந்தார்.             இறையவர் மறையவ பிரமசாரியாக வந்தார். அவர் பிடித்திருந்த தண்டில் இரு கோவணங்கள், திருநீற்றுப்பை, தருப்பை...

அப்பூதியடிகள் நாயனார்

 அப்பூதி அடிகள் என்பவர் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார்.சைவ சமயத்தில் சிவபெருமானும், அடியாரும் ஒருவரே என்பதை விளக்க அப்பூதி அடிகள் வரலாறு கூறப்படுகிறது. அப்பூதி அடிகள் திருநாவுக்கரசர் எனும் சைவரை வணங்கியே வீடுபேரு அடைந்தார்.   வாழ்க்கைப் புராணம்                    அப்பூதியடிகள் நாயனார் சோழ நாட்டில் திங்களூர் எனும் ஊரில் வாழ்ந்துவந்தார். இவர் திருநாவுக்கரசர் சமகாலத்தவர். அந்நாளில் திருநாவுக்கரசரின் சிவத்தொண்டினை அறிந்து அவர்பால் பக்தி கொண்டார். அதனால் திருநாவுக்கரசர் பெயரால் மக்களுக்கு அன்னம் படைத்தல், சத்திரம் அமைத்தல், நீர் கொடுத்தல் போன்ற பணிகளைச் செய்துவந்தார்.மேலும் அவர்பால் கொண்ட பற்றினால் தனது மூன்று குழந்தைகளுக்கும் மூத்த திருநாவுக்கரசு நடு திருநாவுக்கரசு மற்றும் இளைய திருநாவுக்கரசு என்று பெயர் சூட்டினார். ஒரு முறை திருநாவுக்கரசர் அப்பூதி அடிகள் வசித்த ஊருக்கு சென்ற போது, அங்கு தன்னுடைய பெயரால் தர்மங்கள் நடப்பதைக் கண்டு வியந்தார். அப்பூதி அடிகளார் பற்றிக் கேள்விப் பெற்...

அதிபத்த நாயனார்

  சொல்லிலக்கணம்: அதிபக்தர் என்றால் சிறந்த பக்தர் என்று பொருளாகும். அதிபக்தர் என்பதே அதிபத்தர் என்று வழங்கப்படுகிறது.      வாழ்க்கைப் புராணம் சோழ நாட்டின் துறைமுக நகராக நாகபட்டினம் விளங்கிய காலம். நாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகே நுழைப்பாடி என்ற இடத்தில் பரதவர் எனும் இனத்தவர் மீன்பிடி தொழில் செய்து வாழ்ந்துவந்தனர். அவர்களுக்கு தலைவராக அதிபக்தர் இருந்தார். அவர் சிவபக்தி மிகுந்தவர் என்பதால் தனக்கு கிடைக்கும் மீன்களில் ஒன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனக்கு ஒரு மீன் மட்டுமே கிடைக்கும் காலங்களிலும் இந்த வழமை தவறாது வந்தார். ஒரு சமயம் தொடர்ந்து ஒரு நாளுக்கு ஒரு மீன் என்றவாறே கிடைத்து வந்தது. அப்போதும் அந்தவொரு மீனையும் இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு அதிபக்தர் பசியொடு இருந்தார். அவரைப் போலவே நண்பர்களும், உறவினர்களும் உணவின்றி வருந்தினர். தொடர்ந்து வந்த நாளெல்லாம் இவ்வாறு ஒரு மீன் கிடைப்பதே வழமையாக நிகழ்ந்தது. ஆயினும் அதித்தர் தன்னுடைய பக்தியிலிருந்து தவறாமல் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் செயலை செய்து வந்தார். அதிபக்தரை சோதிக்க ...