Skip to main content

இயற்பகை நாயனார்

 இயற்பகையார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவரை “இல்லையே எனாத இயற்பகைக்கு அடியேன்” என்று திருத்தொண்டத் தொகை வர்ணிக்கிறது.

சோழவள நாட்டில் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் அவதரித்தவர். உலக இயலுக்குப் பகையானவர். அதனால் இயற்பகையார். அருளின் இயலை ஒருபோதும் பகையாதவர், பெருஞ் செல்லம் படைத்தவர். சிவனடியார் விரும்பிக் கேட்கும் எதனையும் இல்லை என்னாது வழங்கும் இயல்பினையுடையவர்.

இவருடைய என்னல் தன்மையை உலகுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான் தூர்த்த வேதிய அடியார் கோலத்துடன் வந்தார். இயற்பகையார் அவரை வரவேற்று வந்தனை வழிபாடு செய்தார். வந்த அடியார் "மன்னு காதலுன் மனைவியை வேண்டி வந்தனம்" என்றார். இயற்பகையார் உள்ளம் உவந்து, "என்பால் உள்ளதனையே கேட்டருளினீர்” என்று கூறி மனைவியாரை வழங்கினார், "உறவினர் தடுப்பார்கள்; நீ துணையாக வருக" என்றார் அடியார்.



இயற்பகையார் வாள் தாங்கி உடன் சென்றார். தடுத்த உறவினர்களைக் கொன்று குவித்தார். திருச்சாய்க்காட்டின் அருகில் இனி நீ போகலாம்" என்றார் இறைவர். இயற்பகையார் இறைஞ்சி மனமகிழ்ந்து திரும்பினார். பொய்யிலா உள்ளத்தன்; திரும்பிக்கூடப் பார்க்காமல் போகின்றான்" என்று மகிழ்ந்தார் இறைவர். இயற்பகை நாயனாரை ஓலம் இட்டு அழைத்தருளினார்.

"இயற்பகை முனிவா ஓலம்! ஈண்டுநீ வருவாய் ஓலம்!

 அயர்ப்பிலா தானே ஓலம்! அன்பனே ஓலம்! ஓலம்!

 செயற்கருஞ் செய்கை செய்த தீரனே ஓலம்! என்றான்

 மயக்கறு மறைஒலிட்டு மாலயன் தேடநின்றான்."

இயற்பகையார் விரைந்து ஓடினார். அங்கே அருந்தவர் இல்லை. பெருந்திரு மனைவியார் இருந்தார். வந்தவர் எங்கே? என்று திகைத்தார்.

 
 
விடைமீது விமலன் காட்சியளித்தான். எல்லையில்லாத இன்பத்துடன் போற்றினார். இயற்பகையார் மனைவியாருடன் சிவபதம் பெற்றார். அவருடைய வாளால் மாண்ட உறவினரும் வானுலகில் இன்பம் எய்தினார்கள்.
 

குரு பூசை

இயற்பகை நாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் மார்கழி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
 

Comments

Popular posts from this blog

அமர்நீதி நாயனார்

  அமர்நீதி நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். அமர்நீதியார் சோழநாட்டிலே பழையாறை என்னும் பழமையான (தொன்மையான) பகுதியிலே பிறந்தார். 7 ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்தவர். கோவணக் கள்வராக வந்த சிவபெருமானின் முன்பு துலைத்தட்டில் (தராசில்) தன் மனைவி, மகனுடன் ஏறித் தன்னையே அவருக்கு அர்ப்பணித்து, அத்தட்டே விமானமாகச் செல்ல, சிவபதம் பெற்ற பெருமைக்குரியவர் இவர். வாழ்க்கைப் புராணம்          சோழவள நாட்டில் பழையாறை என்ற பதியில் வணிகர் குலத்தில் பிறந்தவர். அடியார்க்குக் கந்தை, கீளுடை, கோவணம் முதலியன கருத்தறிந்து உதவி, செல்வத்தின் பயன் பெற்று வந்தார்.             அருகில் உள்ள திருநல்லூர் என்ற சிவத்தலத்தில் சென்று சிவபெருமானுடைய திருவிழாக்களைச் சேவிப்பார். அங்கு ஒரு திருமடம் புதுக்கி, அங்கேயே தங்கி அறம் பல புரிந்து வந்தார்.             இறையவர் மறையவ பிரமசாரியாக வந்தார். அவர் பிடித்திருந்த தண்டில் இரு கோவணங்கள், திருநீற்றுப்பை, தருப்பை...

இடங்கழி நாயனார்.

வளமை மிகுந்த கோனாட்டில் கொடும்பாளூரில் சோழச் குலத்தில் இடங்கழி நாயனார் பிறந்தார். கனவிலும் நனவிலும் கண்ணுதலார் கமலமலரடியைப் போற்றி வந்தார். சிவாலயங்கள் எல்லாவற்றிலும் பூசனைகள் சிறக்குமாறு செய்தார். ஒரு அடியார் நாள்நோறும் சிவனடியார்க்கு அமுதளிக்கும் நியமம் பூண்டவர். ஒருநாள் ஒன்றும் இலராகி இடாபட்டார். இடங்கழியாருடைய நெற்களஞ்சியத்தில் இரவில் இருளில் வந்து நெல்லை எடுத்தார். காவலர்கள் பிடித்து இடங்கழியார் முன் விடுத்தார்கள். அரசர் ‘களவு செய்யலாமா?" என்று கேட்டார் "சிவனடியார்க்கு அன்னதானஞ் செய்யும் பொருட்டு இது செய்தேன்” என்றார் அவர். உடனே இடங்கழியாச் இரக்கம் அடைந்து, 'இவர்அன்றோ எனக்குக் கருவூலம்?" என்று கூறி, "நெற்களஞ்சியமே யன்றி, ஏனைய அரசாங்கப் பொருள்கள் யாவும் அடியார்கள் கொள்ளை கொள்ளுமாறு பறை சாற்றுங்கள்" என்றார். அவ்வாறே பறையறைந்தார்கள். அடியார்கள் பொன்னும் நெல்லும் கொண்டு இன்புற்றார்கள். மன்னர் பன்னெடுங்காலம் வாழ்ந்து சிவன் சேவடி சேர்ந்தார்,   குரு பூசை இடங்கழி நாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.    

அப்பூதியடிகள் நாயனார்

 அப்பூதி அடிகள் என்பவர் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார்.சைவ சமயத்தில் சிவபெருமானும், அடியாரும் ஒருவரே என்பதை விளக்க அப்பூதி அடிகள் வரலாறு கூறப்படுகிறது. அப்பூதி அடிகள் திருநாவுக்கரசர் எனும் சைவரை வணங்கியே வீடுபேரு அடைந்தார்.   வாழ்க்கைப் புராணம்                    அப்பூதியடிகள் நாயனார் சோழ நாட்டில் திங்களூர் எனும் ஊரில் வாழ்ந்துவந்தார். இவர் திருநாவுக்கரசர் சமகாலத்தவர். அந்நாளில் திருநாவுக்கரசரின் சிவத்தொண்டினை அறிந்து அவர்பால் பக்தி கொண்டார். அதனால் திருநாவுக்கரசர் பெயரால் மக்களுக்கு அன்னம் படைத்தல், சத்திரம் அமைத்தல், நீர் கொடுத்தல் போன்ற பணிகளைச் செய்துவந்தார்.மேலும் அவர்பால் கொண்ட பற்றினால் தனது மூன்று குழந்தைகளுக்கும் மூத்த திருநாவுக்கரசு நடு திருநாவுக்கரசு மற்றும் இளைய திருநாவுக்கரசு என்று பெயர் சூட்டினார். ஒரு முறை திருநாவுக்கரசர் அப்பூதி அடிகள் வசித்த ஊருக்கு சென்ற போது, அங்கு தன்னுடைய பெயரால் தர்மங்கள் நடப்பதைக் கண்டு வியந்தார். அப்பூதி அடிகளார் பற்றிக் கேள்விப் பெற்...