Skip to main content

அப்பூதியடிகள் நாயனார்

 அப்பூதி அடிகள் என்பவர் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார்.சைவ சமயத்தில் சிவபெருமானும், அடியாரும் ஒருவரே என்பதை விளக்க அப்பூதி அடிகள் வரலாறு கூறப்படுகிறது. அப்பூதி அடிகள் திருநாவுக்கரசர் எனும் சைவரை வணங்கியே வீடுபேரு அடைந்தார்.

 

வாழ்க்கைப் புராணம்

                அப்பூதியடிகள் நாயனார் சோழ நாட்டில் திங்களூர் எனும் ஊரில் வாழ்ந்துவந்தார். இவர் திருநாவுக்கரசர் சமகாலத்தவர். அந்நாளில் திருநாவுக்கரசரின் சிவத்தொண்டினை அறிந்து அவர்பால் பக்தி கொண்டார். அதனால் திருநாவுக்கரசர் பெயரால் மக்களுக்கு அன்னம் படைத்தல், சத்திரம் அமைத்தல், நீர் கொடுத்தல் போன்ற பணிகளைச் செய்துவந்தார்.மேலும் அவர்பால் கொண்ட பற்றினால் தனது மூன்று குழந்தைகளுக்கும் மூத்த திருநாவுக்கரசு நடு திருநாவுக்கரசு மற்றும் இளைய திருநாவுக்கரசு என்று பெயர் சூட்டினார். ஒரு முறை திருநாவுக்கரசர் அப்பூதி அடிகள் வசித்த ஊருக்கு சென்ற போது, அங்கு தன்னுடைய பெயரால் தர்மங்கள் நடப்பதைக் கண்டு வியந்தார். அப்பூதி அடிகளார் பற்றிக் கேள்விப் பெற்று அவரில்லம் சென்றார் திருநாவுக்கரசர்.

                அப்பூதியடிகளை சந்தித்த திருநாவுக்கரசர் தான் திருநாவுக்கரசர் என்று சொல்லாமல் ஏன் உங்கள் பெயரில் தர்மச் செயல்களைச் செய்யாமல் திருநாவுக்கரசரின் பெயரில் செய்கின்றீர்கள் என்று வினவினார். அதற்கு அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் சமண சமயத்தில் பெரும் துறவியாய் இருந்ததையும், சிவனருளால் அச்சமயம் விட்டு சைவ மதமேற்று தொண்டுகள் புரிந்து வருவதையும் எடுத்துரைத்தார். இறைவனின் மீது அன்பு கொள்வதை விடவும், அவனுடைய அடியார்கள் மேல் அன்பு கொள்ளுதல் மேலும் சிறப்பானது என்று எடுத்துரைத்தார். அதன் பின்பு தானே திருநாவுக்கரசர் என்று தன்னை வெளிப்படுத்தினார் திருநாவுக்கரசர். திருநாவுக்கரசரே தன்னுடைய இல்லம் வந்திருப்பதை அறிந்து மகிழ்ந்த அப்பூதி அடிகள் உணவு உண்ண அழைத்தார்.ஒப்புக்கொண்ட திருநாவுக்கரசர் உணவு தயாராவதற்குள் திருக்கோயில் சென்று வருவதாக புறப்பட்டார்.

                தாய் தந்தையார் ஏவ மூத்த திருநாவுக்கரக எனக்கு இப்பணி கிட்டியதே என்று மனமகிழ்ச்சியுடன் சென்று வாழையிலை கொய்தான். அரவந் தீண்டியது. விரைந்து வந்து இலையைப் பெற்றோர் முன் வைத்து மாண்டான், மாண்ட மகனைப் பாயினால் மறைந்துப் புறங்கட்டில் வைத்து, முகமலர்ந்து . அப்பர் பெருமானை வரவேற்று அமுது படைத்தார்கள். ஆனால் திருநாவுக்கரர் தன்னுடன் அப்பூதியடிகளின் மகனையும் உணவருந்த அழைத்துவர கோரிக்கை வைத்தார். அப்பூதி அடிகள் தன்னுடைய மகன் பாம்பு தீண்டி இறந்ததை தெரிவித்தார்.அவர் அன்பின் திறத்தைக் கண்டு வியந்தார். 'ஒன்றுகொலாம்' என்ற திருப்பதிகம் பாடி மகனை எழுப்பினார்.

 

 

குரு பூசை

அப்பூதியடிகள் நாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் தை மாதம் சதயம்  நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

 

 

 

 

 

மேலும் அறிந்துகொள்ள :

  1. அப்பூதி அடிகள் நாயனார 
  2.  நாயன்மார்கள்
  3.  http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=114&pno=154  

Comments

Popular posts from this blog

அமர்நீதி நாயனார்

  அமர்நீதி நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். அமர்நீதியார் சோழநாட்டிலே பழையாறை என்னும் பழமையான (தொன்மையான) பகுதியிலே பிறந்தார். 7 ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்தவர். கோவணக் கள்வராக வந்த சிவபெருமானின் முன்பு துலைத்தட்டில் (தராசில்) தன் மனைவி, மகனுடன் ஏறித் தன்னையே அவருக்கு அர்ப்பணித்து, அத்தட்டே விமானமாகச் செல்ல, சிவபதம் பெற்ற பெருமைக்குரியவர் இவர். வாழ்க்கைப் புராணம்          சோழவள நாட்டில் பழையாறை என்ற பதியில் வணிகர் குலத்தில் பிறந்தவர். அடியார்க்குக் கந்தை, கீளுடை, கோவணம் முதலியன கருத்தறிந்து உதவி, செல்வத்தின் பயன் பெற்று வந்தார்.             அருகில் உள்ள திருநல்லூர் என்ற சிவத்தலத்தில் சென்று சிவபெருமானுடைய திருவிழாக்களைச் சேவிப்பார். அங்கு ஒரு திருமடம் புதுக்கி, அங்கேயே தங்கி அறம் பல புரிந்து வந்தார்.             இறையவர் மறையவ பிரமசாரியாக வந்தார். அவர் பிடித்திருந்த தண்டில் இரு கோவணங்கள், திருநீற்றுப்பை, தருப்பை...

இடங்கழி நாயனார்.

வளமை மிகுந்த கோனாட்டில் கொடும்பாளூரில் சோழச் குலத்தில் இடங்கழி நாயனார் பிறந்தார். கனவிலும் நனவிலும் கண்ணுதலார் கமலமலரடியைப் போற்றி வந்தார். சிவாலயங்கள் எல்லாவற்றிலும் பூசனைகள் சிறக்குமாறு செய்தார். ஒரு அடியார் நாள்நோறும் சிவனடியார்க்கு அமுதளிக்கும் நியமம் பூண்டவர். ஒருநாள் ஒன்றும் இலராகி இடாபட்டார். இடங்கழியாருடைய நெற்களஞ்சியத்தில் இரவில் இருளில் வந்து நெல்லை எடுத்தார். காவலர்கள் பிடித்து இடங்கழியார் முன் விடுத்தார்கள். அரசர் ‘களவு செய்யலாமா?" என்று கேட்டார் "சிவனடியார்க்கு அன்னதானஞ் செய்யும் பொருட்டு இது செய்தேன்” என்றார் அவர். உடனே இடங்கழியாச் இரக்கம் அடைந்து, 'இவர்அன்றோ எனக்குக் கருவூலம்?" என்று கூறி, "நெற்களஞ்சியமே யன்றி, ஏனைய அரசாங்கப் பொருள்கள் யாவும் அடியார்கள் கொள்ளை கொள்ளுமாறு பறை சாற்றுங்கள்" என்றார். அவ்வாறே பறையறைந்தார்கள். அடியார்கள் பொன்னும் நெல்லும் கொண்டு இன்புற்றார்கள். மன்னர் பன்னெடுங்காலம் வாழ்ந்து சிவன் சேவடி சேர்ந்தார்,   குரு பூசை இடங்கழி நாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.