Skip to main content

இளையான்குடி மாறநாயனார்

“இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் - திருத்தொண்டத் தொகை".


 

பாண்டிய நாட்டில் இளையான்குடி என்ற ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர். மாறனார் என்ற பெயர் கொண்டவர். செல்லம் படைத்தவர். மிகுந்த நிலங்கள் உடையவராய்விளங்கினார். அடியார் யாராக இருப்பினும், எத்தனை பேர் வந்தாலும் ஈரமுள்ள இனிய மென்சொல் கூறி வரவேற்று உபசரித்து உயர்ந்த உணவு தந்து உவகை யுறுவார்.

       "கொண்டுவந்து மனைப்புகுந்து குலாவுபாதம் விளக்கியே

        மண்டு காதலின் ஆதனத்திடை வைத்தருச்சனை செய்தபின்

        உண்டி நாலு விதத்திலாறு சுவைத்திறத்தினில் ஒப்பிலா

        அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுதுசெய்ய அளித்துளார்."

செல்வம் நிறைந்துள்ள போது அன்னதானம் புரிவது இயல்பு; எளிதங் கூட. வறுமையால் வாடும் போதும் இவர் அன்ன தானம் புரிவதில் வல்லவர் என உலகினர்க்கு அறிவிக்கவேண்டி, இறைவர் அவருடைய செல்வம் மறையுமாறு திருவுளஞ் செய்தார். மாறனாரின் செல்வங்கள் யாவும் சிறுகச்சிறுக மறைந்தன. வறுமைப்பதம் எய்தினார்.

அன்னமும் ஏனமும் அறியாத அரனார், அடியாராக எழுந்தருளி வந்தார். வந்த நேரம் நடு இரவு.

சில நாள்களாகவே உணவு இன்றி நாயனார் பசியால் களைத்து கதவு அடைத்து மழையுங் குளிரும் வாட்ட, வீட்டுக்குள் ஒடுங்கியிருந்தார்.

அருந்தவரை அன்புடன் வரவேற்றார். திருமேனியின் ஈரத்தை மாற்றினார். அவரை இருக்கச் செய்து, உள்ளே சென்று, "மாதரசே!
நமக்கு உணவில்லை யென்றாலும், அரனார் அடியார்க்கு அமுது செய்விக்க என்ன வழி?" என்று கேட்டார். 

அம்மையார். 'பெருமானே! நடு இரவு இனி நமக்குக் கடன் தருவாகும் இல்லை. இன்று வயலில் பகலில் விதைத்த முளைகளை வாரி வந்தால் ஒருவாறு சமைத்து அடியவரைப் பசியாறச் செய்யலாம்" என்றார்.

நாயனார் தலையில் பெரிய மிடாவைக் கவிழ்த்துக் கொண்டு கொட்டுகின்ற மழையில், காலால் வழி தடவிக் கொண்டு மெல்ல கரிய இருளில் வயலுக்குச் சென்று, நீரில் ஒரு புறம் ஒதுங்கியுள்ள நெல்முனைகளை வாரிக் கொண்டு வந்து தந்தார். விறகில்லை யென்றார். மனைவியார். வீட்டின் பின்புறம் உள்ள பகுதியையறுத்துத் தந்தார். விறகினை மூட்டி முளையை வறுத்து அரிசியாக்கி அன்னமாகச் சமைத்தார். கறிக்கு என் செய்வோம் என்றார். தோட்டத்தில் பழிமுதல் பறிப்பார் போல் குழிநிரம்பாத கீரைகளைப் பறித்துக் கொணர்ந்து தந்தார். கறியமுது செய்து இறைவனைத் துயில் உணர்த்த, 

 


அவர் ஜோதியாய் எழுந்து அருள் புரிந்தார். மாறநாயனார் மனைவியுடன், சிவலோகம் சேர்ந்தார். குபேரனும் பணிசெய்யும் பெரும்பேறு பெற்றார்.




இளையான்குடிமாறார் அவதரித்த & முக்தி பெற்ற ஸ்தலம் ராஜேந்திர சோழிஸ்வர கோவிலில்


 

குரு பூசை

இளையான்குடி மாறநாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் ஆவணி மாதம் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
 
 
 
 
 

 

Comments

Popular posts from this blog

எறிபத்த நாயனார்

  இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன் – திருத்தொண்டத்தொகை                           கொங்கு நாட்டுத்தலங்கள் ஏழு. அவற்றுள் ஒன்று கருவூர், அத்தலத்தில் ஆனிலை யென்ற கோயிலில் பசுபதி ஈச்சுரர் எழுந்தருளியிருப்பார். அந்நகரைப் புகழ்ச்சோழர் என்ற ஆற்றல் படைத்த மன்னர் அறநெறி வழுவாமல் ஆட்சிபுரிந்தார்.                     அத் தலத்தில் எறிபத்தர் என்ற சிவனடியார் வாழ்ந்தார். அவர்திருக்கரத்தில் பரசு என்ற படைக்கலம் ஏந்தியவர். அடியார்க்கு எங்காவது தீங்கு நேர்ந்தால் அவர் தமது பரசினால் தீமையைத் தடுத்து நலம் புரிவார்.                     அன்று அஷ்டமி. மறுநாள் மகாநவமி. சிவகாமியாண்டார் என்னும் அடியார் நந்தவனத்தில் மலர் பறித்துப் பூக்கூடையைத் தண்டில் தொங்க விட்டுத் திருக்கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தார்.                     புகழ்ச்சோழருடைய பட்டவர்த...

இடங்கழி நாயனார்.

வளமை மிகுந்த கோனாட்டில் கொடும்பாளூரில் சோழச் குலத்தில் இடங்கழி நாயனார் பிறந்தார். கனவிலும் நனவிலும் கண்ணுதலார் கமலமலரடியைப் போற்றி வந்தார். சிவாலயங்கள் எல்லாவற்றிலும் பூசனைகள் சிறக்குமாறு செய்தார். ஒரு அடியார் நாள்நோறும் சிவனடியார்க்கு அமுதளிக்கும் நியமம் பூண்டவர். ஒருநாள் ஒன்றும் இலராகி இடாபட்டார். இடங்கழியாருடைய நெற்களஞ்சியத்தில் இரவில் இருளில் வந்து நெல்லை எடுத்தார். காவலர்கள் பிடித்து இடங்கழியார் முன் விடுத்தார்கள். அரசர் ‘களவு செய்யலாமா?" என்று கேட்டார் "சிவனடியார்க்கு அன்னதானஞ் செய்யும் பொருட்டு இது செய்தேன்” என்றார் அவர். உடனே இடங்கழியாச் இரக்கம் அடைந்து, 'இவர்அன்றோ எனக்குக் கருவூலம்?" என்று கூறி, "நெற்களஞ்சியமே யன்றி, ஏனைய அரசாங்கப் பொருள்கள் யாவும் அடியார்கள் கொள்ளை கொள்ளுமாறு பறை சாற்றுங்கள்" என்றார். அவ்வாறே பறையறைந்தார்கள். அடியார்கள் பொன்னும் நெல்லும் கொண்டு இன்புற்றார்கள். மன்னர் பன்னெடுங்காலம் வாழ்ந்து சிவன் சேவடி சேர்ந்தார்,   குரு பூசை இடங்கழி நாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.    

கடமையை நிறைவேற்ற தவறிய கண்ணன்

 பாரதப் போர் முடிந்த 19-ஆம் நாள்! அந்தக் கால வழக்கப்படி, போரில் வென்ற மஹாரதர்களுக்கும், மன்னர்களுக்கும் மாலை- மரியாதை செய்யும் விழா ஒன்று நடக்கும் போரில் பங்கேற்ற தேர்கள் வரிசையாக நிறுத்தப்படும்.  தேரோட்டிகள் கீழே இறங்கி, மண்டியிட்டு நிற்பார்கள். மன்னன் அல்லது மஹாரதர்கள் கீழே இறங்கியதும், தேர்ப்பாகன் மன்னனை வணங்கி, மாலையிட்டு, வெற்றி கோஷம் முழங்குவான்.  அதன்பிறகு, போரில் வெற்றி தேடித்தந்த தேர்ப்பாகனுக்கு மன்னன் அல்லது மஹாரதர்கள் பொன்னும் பொருளும் சன்மானமும் தந்து கௌரவிப்பார்கள். குருக்ஷேத்திரப் போர் வெற்றிகரமாக முடிந்தபின், வெற்றி கண்ட பாண்டவ சகோதரர்களுக்காக இந்த விழா ஏற்பாடாகி இருந்தது. தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவரது ரதங்களும் வரிசையாக நின்றன. மரியாதை விழாச் சடங்குகள் ஆரம்பமாயின.   தர்மனுடைய தேரின் முறை முடிந்தபின், பீமனது சாரதி அவனை வணங்கி வாழ்த்தினான். பரிசாக விலை உயர்ந்த ரத்தினமாலையை பாகனுக்கு அணிவித்து கௌரவித்தான் பீமன்.  மேலும், பூமியும் பொன்னும் பொருளும் வழங்கினான். வெற்றி கோஷங்கள் வானைப் பிளந்தன. அடுத்தது, அர்ஜுனன் ரதம். சாரதியோ பகவ...