Skip to main content

இளையான்குடி மாறநாயனார்

“இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் - திருத்தொண்டத் தொகை".


 

பாண்டிய நாட்டில் இளையான்குடி என்ற ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர். மாறனார் என்ற பெயர் கொண்டவர். செல்லம் படைத்தவர். மிகுந்த நிலங்கள் உடையவராய்விளங்கினார். அடியார் யாராக இருப்பினும், எத்தனை பேர் வந்தாலும் ஈரமுள்ள இனிய மென்சொல் கூறி வரவேற்று உபசரித்து உயர்ந்த உணவு தந்து உவகை யுறுவார்.

       "கொண்டுவந்து மனைப்புகுந்து குலாவுபாதம் விளக்கியே

        மண்டு காதலின் ஆதனத்திடை வைத்தருச்சனை செய்தபின்

        உண்டி நாலு விதத்திலாறு சுவைத்திறத்தினில் ஒப்பிலா

        அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுதுசெய்ய அளித்துளார்."

செல்வம் நிறைந்துள்ள போது அன்னதானம் புரிவது இயல்பு; எளிதங் கூட. வறுமையால் வாடும் போதும் இவர் அன்ன தானம் புரிவதில் வல்லவர் என உலகினர்க்கு அறிவிக்கவேண்டி, இறைவர் அவருடைய செல்வம் மறையுமாறு திருவுளஞ் செய்தார். மாறனாரின் செல்வங்கள் யாவும் சிறுகச்சிறுக மறைந்தன. வறுமைப்பதம் எய்தினார்.

அன்னமும் ஏனமும் அறியாத அரனார், அடியாராக எழுந்தருளி வந்தார். வந்த நேரம் நடு இரவு.

சில நாள்களாகவே உணவு இன்றி நாயனார் பசியால் களைத்து கதவு அடைத்து மழையுங் குளிரும் வாட்ட, வீட்டுக்குள் ஒடுங்கியிருந்தார்.

அருந்தவரை அன்புடன் வரவேற்றார். திருமேனியின் ஈரத்தை மாற்றினார். அவரை இருக்கச் செய்து, உள்ளே சென்று, "மாதரசே!
நமக்கு உணவில்லை யென்றாலும், அரனார் அடியார்க்கு அமுது செய்விக்க என்ன வழி?" என்று கேட்டார். 

அம்மையார். 'பெருமானே! நடு இரவு இனி நமக்குக் கடன் தருவாகும் இல்லை. இன்று வயலில் பகலில் விதைத்த முளைகளை வாரி வந்தால் ஒருவாறு சமைத்து அடியவரைப் பசியாறச் செய்யலாம்" என்றார்.

நாயனார் தலையில் பெரிய மிடாவைக் கவிழ்த்துக் கொண்டு கொட்டுகின்ற மழையில், காலால் வழி தடவிக் கொண்டு மெல்ல கரிய இருளில் வயலுக்குச் சென்று, நீரில் ஒரு புறம் ஒதுங்கியுள்ள நெல்முனைகளை வாரிக் கொண்டு வந்து தந்தார். விறகில்லை யென்றார். மனைவியார். வீட்டின் பின்புறம் உள்ள பகுதியையறுத்துத் தந்தார். விறகினை மூட்டி முளையை வறுத்து அரிசியாக்கி அன்னமாகச் சமைத்தார். கறிக்கு என் செய்வோம் என்றார். தோட்டத்தில் பழிமுதல் பறிப்பார் போல் குழிநிரம்பாத கீரைகளைப் பறித்துக் கொணர்ந்து தந்தார். கறியமுது செய்து இறைவனைத் துயில் உணர்த்த, 

 


அவர் ஜோதியாய் எழுந்து அருள் புரிந்தார். மாறநாயனார் மனைவியுடன், சிவலோகம் சேர்ந்தார். குபேரனும் பணிசெய்யும் பெரும்பேறு பெற்றார்.




இளையான்குடிமாறார் அவதரித்த & முக்தி பெற்ற ஸ்தலம் ராஜேந்திர சோழிஸ்வர கோவிலில்


 

குரு பூசை

இளையான்குடி மாறநாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் ஆவணி மாதம் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
 
 
 
 
 

 

Comments

Popular posts from this blog

அமர்நீதி நாயனார்

  அமர்நீதி நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். அமர்நீதியார் சோழநாட்டிலே பழையாறை என்னும் பழமையான (தொன்மையான) பகுதியிலே பிறந்தார். 7 ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்தவர். கோவணக் கள்வராக வந்த சிவபெருமானின் முன்பு துலைத்தட்டில் (தராசில்) தன் மனைவி, மகனுடன் ஏறித் தன்னையே அவருக்கு அர்ப்பணித்து, அத்தட்டே விமானமாகச் செல்ல, சிவபதம் பெற்ற பெருமைக்குரியவர் இவர். வாழ்க்கைப் புராணம்          சோழவள நாட்டில் பழையாறை என்ற பதியில் வணிகர் குலத்தில் பிறந்தவர். அடியார்க்குக் கந்தை, கீளுடை, கோவணம் முதலியன கருத்தறிந்து உதவி, செல்வத்தின் பயன் பெற்று வந்தார்.             அருகில் உள்ள திருநல்லூர் என்ற சிவத்தலத்தில் சென்று சிவபெருமானுடைய திருவிழாக்களைச் சேவிப்பார். அங்கு ஒரு திருமடம் புதுக்கி, அங்கேயே தங்கி அறம் பல புரிந்து வந்தார்.             இறையவர் மறையவ பிரமசாரியாக வந்தார். அவர் பிடித்திருந்த தண்டில் இரு கோவணங்கள், திருநீற்றுப்பை, தருப்பை...

இடங்கழி நாயனார்.

வளமை மிகுந்த கோனாட்டில் கொடும்பாளூரில் சோழச் குலத்தில் இடங்கழி நாயனார் பிறந்தார். கனவிலும் நனவிலும் கண்ணுதலார் கமலமலரடியைப் போற்றி வந்தார். சிவாலயங்கள் எல்லாவற்றிலும் பூசனைகள் சிறக்குமாறு செய்தார். ஒரு அடியார் நாள்நோறும் சிவனடியார்க்கு அமுதளிக்கும் நியமம் பூண்டவர். ஒருநாள் ஒன்றும் இலராகி இடாபட்டார். இடங்கழியாருடைய நெற்களஞ்சியத்தில் இரவில் இருளில் வந்து நெல்லை எடுத்தார். காவலர்கள் பிடித்து இடங்கழியார் முன் விடுத்தார்கள். அரசர் ‘களவு செய்யலாமா?" என்று கேட்டார் "சிவனடியார்க்கு அன்னதானஞ் செய்யும் பொருட்டு இது செய்தேன்” என்றார் அவர். உடனே இடங்கழியாச் இரக்கம் அடைந்து, 'இவர்அன்றோ எனக்குக் கருவூலம்?" என்று கூறி, "நெற்களஞ்சியமே யன்றி, ஏனைய அரசாங்கப் பொருள்கள் யாவும் அடியார்கள் கொள்ளை கொள்ளுமாறு பறை சாற்றுங்கள்" என்றார். அவ்வாறே பறையறைந்தார்கள். அடியார்கள் பொன்னும் நெல்லும் கொண்டு இன்புற்றார்கள். மன்னர் பன்னெடுங்காலம் வாழ்ந்து சிவன் சேவடி சேர்ந்தார்,   குரு பூசை இடங்கழி நாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.    

அப்பூதியடிகள் நாயனார்

 அப்பூதி அடிகள் என்பவர் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார்.சைவ சமயத்தில் சிவபெருமானும், அடியாரும் ஒருவரே என்பதை விளக்க அப்பூதி அடிகள் வரலாறு கூறப்படுகிறது. அப்பூதி அடிகள் திருநாவுக்கரசர் எனும் சைவரை வணங்கியே வீடுபேரு அடைந்தார்.   வாழ்க்கைப் புராணம்                    அப்பூதியடிகள் நாயனார் சோழ நாட்டில் திங்களூர் எனும் ஊரில் வாழ்ந்துவந்தார். இவர் திருநாவுக்கரசர் சமகாலத்தவர். அந்நாளில் திருநாவுக்கரசரின் சிவத்தொண்டினை அறிந்து அவர்பால் பக்தி கொண்டார். அதனால் திருநாவுக்கரசர் பெயரால் மக்களுக்கு அன்னம் படைத்தல், சத்திரம் அமைத்தல், நீர் கொடுத்தல் போன்ற பணிகளைச் செய்துவந்தார்.மேலும் அவர்பால் கொண்ட பற்றினால் தனது மூன்று குழந்தைகளுக்கும் மூத்த திருநாவுக்கரசு நடு திருநாவுக்கரசு மற்றும் இளைய திருநாவுக்கரசு என்று பெயர் சூட்டினார். ஒரு முறை திருநாவுக்கரசர் அப்பூதி அடிகள் வசித்த ஊருக்கு சென்ற போது, அங்கு தன்னுடைய பெயரால் தர்மங்கள் நடப்பதைக் கண்டு வியந்தார். அப்பூதி அடிகளார் பற்றிக் கேள்விப் பெற்...