Skip to main content

Posts

Showing posts from February, 2022

எறிபத்த நாயனார்

  இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன் – திருத்தொண்டத்தொகை                           கொங்கு நாட்டுத்தலங்கள் ஏழு. அவற்றுள் ஒன்று கருவூர், அத்தலத்தில் ஆனிலை யென்ற கோயிலில் பசுபதி ஈச்சுரர் எழுந்தருளியிருப்பார். அந்நகரைப் புகழ்ச்சோழர் என்ற ஆற்றல் படைத்த மன்னர் அறநெறி வழுவாமல் ஆட்சிபுரிந்தார்.                     அத் தலத்தில் எறிபத்தர் என்ற சிவனடியார் வாழ்ந்தார். அவர்திருக்கரத்தில் பரசு என்ற படைக்கலம் ஏந்தியவர். அடியார்க்கு எங்காவது தீங்கு நேர்ந்தால் அவர் தமது பரசினால் தீமையைத் தடுத்து நலம் புரிவார்.                     அன்று அஷ்டமி. மறுநாள் மகாநவமி. சிவகாமியாண்டார் என்னும் அடியார் நந்தவனத்தில் மலர் பறித்துப் பூக்கூடையைத் தண்டில் தொங்க விட்டுத் திருக்கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தார்.                     புகழ்ச்சோழருடைய பட்டவர்த...

உருத்திர பசுபதி நாயனார்

“முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கு மடியேன்” – திருத்தொண்டத் தொகை     சோழவள நாட்டில், திருத்தலையூரில் அந்தணர் குலத்தில் அவதரித்தவர் உருத்திரபசுபதியார்.                 இவர் சதா கழுத்தளவு நீரில் நின்று உச்சிமேற் கரங்கூப்பிக் கொண்டு, ஸ்ரீ ருத்ரம் என்ற மந்திரத்தை ஓதி சிவபெருமானைத்துதித்துக் கொண்டிருந்தார். இதனாலயே உருத்திர பசுபதி என்ற பெயரும் பெற்றார். ஆரும் பெறாத பேரின்பப் பெருவாழ்வைப் பெற்றார்.  குரு பூசை உருத்திர பசுபதிநாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

இளையான்குடி மாறநாயனார்

“இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் - திருத்தொண்டத் தொகை".   பாண்டிய நாட்டில் இளையான்குடி என்ற ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர். மாறனார் என்ற பெயர் கொண்டவர். செல்லம் படைத்தவர். மிகுந்த நிலங்கள் உடையவராய்விளங்கினார். அடியார் யாராக இருப்பினும், எத்தனை பேர் வந்தாலும் ஈரமுள்ள இனிய மென்சொல் கூறி வரவேற்று உபசரித்து உயர்ந்த உணவு தந்து உவகை யுறுவார்.         " கொண்டுவந்து மனைப்புகுந்து குலாவுபாதம் விளக்கியே           மண்டு காதலின் ஆதனத்திடை வைத்தருச்சனை செய்தபின்           உண்டி நாலு விதத்திலாறு சுவைத்திறத்தினில் ஒப்பிலா           அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுதுசெய்ய அளித்துளார்." செல்வம் நிறைந்துள்ள போது அன்னதானம் புரிவது இயல்பு; எளிதங் கூட. வறுமையால் வாடும் போதும் இவர் அன்ன தானம் புரிவதில் வல்லவர் என உலகினர்க்கு அறிவிக்கவேண்டி, இறைவர் அவருடைய செல்வம் மறையுமாறு திருவுளஞ் செய்தார். மாறனாரின் செல்வங்கள் யாவும் சிறுகச்சிறுக மறைந்தன. வறுமைப்பதம் எய்தினார். அன்னமு...