Skip to main content

Posts

Featured Post

ஏயர்கோன் கலிக்காம நாயனார் | Eyarkon Kalikkama Nayanar

Recent posts

கடமையை நிறைவேற்ற தவறிய கண்ணன்

 பாரதப் போர் முடிந்த 19-ஆம் நாள்! அந்தக் கால வழக்கப்படி, போரில் வென்ற மஹாரதர்களுக்கும், மன்னர்களுக்கும் மாலை- மரியாதை செய்யும் விழா ஒன்று நடக்கும் போரில் பங்கேற்ற தேர்கள் வரிசையாக நிறுத்தப்படும்.  தேரோட்டிகள் கீழே இறங்கி, மண்டியிட்டு நிற்பார்கள். மன்னன் அல்லது மஹாரதர்கள் கீழே இறங்கியதும், தேர்ப்பாகன் மன்னனை வணங்கி, மாலையிட்டு, வெற்றி கோஷம் முழங்குவான்.  அதன்பிறகு, போரில் வெற்றி தேடித்தந்த தேர்ப்பாகனுக்கு மன்னன் அல்லது மஹாரதர்கள் பொன்னும் பொருளும் சன்மானமும் தந்து கௌரவிப்பார்கள். குருக்ஷேத்திரப் போர் வெற்றிகரமாக முடிந்தபின், வெற்றி கண்ட பாண்டவ சகோதரர்களுக்காக இந்த விழா ஏற்பாடாகி இருந்தது. தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவரது ரதங்களும் வரிசையாக நின்றன. மரியாதை விழாச் சடங்குகள் ஆரம்பமாயின.   தர்மனுடைய தேரின் முறை முடிந்தபின், பீமனது சாரதி அவனை வணங்கி வாழ்த்தினான். பரிசாக விலை உயர்ந்த ரத்தினமாலையை பாகனுக்கு அணிவித்து கௌரவித்தான் பீமன்.  மேலும், பூமியும் பொன்னும் பொருளும் வழங்கினான். வெற்றி கோஷங்கள் வானைப் பிளந்தன. அடுத்தது, அர்ஜுனன் ரதம். சாரதியோ பகவ...

எறிபத்த நாயனார்

  இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன் – திருத்தொண்டத்தொகை                           கொங்கு நாட்டுத்தலங்கள் ஏழு. அவற்றுள் ஒன்று கருவூர், அத்தலத்தில் ஆனிலை யென்ற கோயிலில் பசுபதி ஈச்சுரர் எழுந்தருளியிருப்பார். அந்நகரைப் புகழ்ச்சோழர் என்ற ஆற்றல் படைத்த மன்னர் அறநெறி வழுவாமல் ஆட்சிபுரிந்தார்.                     அத் தலத்தில் எறிபத்தர் என்ற சிவனடியார் வாழ்ந்தார். அவர்திருக்கரத்தில் பரசு என்ற படைக்கலம் ஏந்தியவர். அடியார்க்கு எங்காவது தீங்கு நேர்ந்தால் அவர் தமது பரசினால் தீமையைத் தடுத்து நலம் புரிவார்.                     அன்று அஷ்டமி. மறுநாள் மகாநவமி. சிவகாமியாண்டார் என்னும் அடியார் நந்தவனத்தில் மலர் பறித்துப் பூக்கூடையைத் தண்டில் தொங்க விட்டுத் திருக்கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தார்.                     புகழ்ச்சோழருடைய பட்டவர்த...